ஆசையாகத்தான் இருக்கிறது …..

Posted by அகத்தீ Labels:



ஆசையாகத்தான் இருக்கிறது …..




பிறர் மனம் புண்படாமல்
பேசத்தான் ஆசையாக இருக்கிறது
உண்மையை நியாயத்தை
எப்படி பேசாமல் இருப்பது ?



யாரோடும் பகைமை பாராட்டாமல்
வாழத்தான் ஆசையாக இருக்கிறது
கண்ணெதிரே நடக்கும் அநீதிகளை
எப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது ?


எச்சூழலிலும் கோபம் தலைக்கேறாமல்
பொறுத்திடத்தான் ஆசையாக இருக்கிறது
கடையனுக்கும் கடையனை ஏறிமிதிக்கையில்
எப்படிச் சீறிச்சினந்தெழாமல் இருப்பது ?





சட்டத்திற்கு அடங்கிய குடிமகனாய்
இருக்கத்தான் ஆசையாக இருக்கிறது
ஆதிக்க அதிகாரம் காப்பதே சட்டமாயின்
எப்படி கொதித்தெழாமல் இருப்பது ?


- சு.பொ.அகத்தியலிங்கம்.















0 comments :

Post a Comment